"தமிழ்நாட்டில் எங்கும் பால் தட்டுப்பாடு இல்லை" - அமைச்சர் நாசர்

0 1293

பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் காரணமாக, தமிழ்நாட்டில் எங்கும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஒரு சங்கம் மட்டுமே பால் விநியோகத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மற்ற சங்கங்கள் முறையாக பால் வழங்கி வருவதாகவும் கூறினார்.

இதனால், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி சீராக பால் விநியோகம் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments